புதுச்சேரி: "ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரியான நேரத்தில் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். பெண்கள் சாதனை செய்ய 30, 35 வயதை கடக்கிறார்கள். அது மருத்துவரீதியில் பல பிரச்சினைகளை உண்டாக்குகிறது" என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியது: "மாணவர்கள் வாய்ப்புகளை வரும்போது பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இது போட்டி நிறைந்த வாழ்க்கை. நேர்முகத் தேர்வுக்கு செல்லும் உங்களுக்கு ஒரு மொழி தெரிந்த சூழலில் மற்றொருவருக்கு 3 மொழி தெரிந்திருந்தால் வாய்ப்பு அவருக்கு சென்றுவிடும். இந்தப் போட்டி நிறைந்த உலகத்தில் வாய்ப்புகளை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uMJwaKV
via IFTTT