89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : லைலத்துல் கத்ர் சிறப்புக் கட்டுரை: நன்மைகளைப் பன்மடங்காக்கும் இரவு

லைலத்துல் கத்ர் சிறப்புக் கட்டுரை: நன்மைகளைப் பன்மடங்காக்கும் இரவு

இறை அருளின் ஆற்றல் வாய்ந்த இரவு என்று கருதப்படும் லைலத்துல் கத்ர் இரவு இன்றிரவு கொண்டாடப்படுகிறது. லைல் என்றால் இரவு, கத்ர் என்றால் சிறப்பு, கண்ணியம் என்று அர்த்தம். சிறப்பும் கண்ணியமும் மிகுந்த இந்த இரவே இஸ்லாமிய நாட்காட்டியின் புனிதமான இரவு. ஆயிரம் மாதங்களுக்கும் மேலானதாகக் கருதப்படும் இந்த இரவில் செய்யப்படும் நன்மையின் பலன் பன்மடங்கு உயர்வானது.

இந்த இரவில்தான், இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் புனித குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டன. ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் வரும் ஒற்றைப்படை நாட்களின் இரவுகள் லைலத்துல் கத்ர் எனக் கருதப்படுகின்றன. இருப்பினும் பொதுவாக, புனித ரமலான் மாதத்தின் 27வது நாளே லைலத்துல் கத்ர் என உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது; கொண்டாடப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ovqg9bk
via IFTTT