89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : காவல் துறையில் பெண்கள் நிலை | மரியாதையே இருக்காது - மன அழுத்தக் காரணிகளை அடுக்கும் பெண் டிஎஸ்பி

காவல் துறையில் பெண்கள் நிலை | மரியாதையே இருக்காது - மன அழுத்தக் காரணிகளை அடுக்கும் பெண் டிஎஸ்பி

பணியில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பதாகவும், எனவே பணியிட மாறுதல் அளிக்கவேண்டும் எனவும் டிஜிபி-க்கு பெண் டிஎஸ்பி கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இதன் பின்னணியைப் பார்ப்போம்.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு டிஎஸ்பியாக பணிபுரிந்து வருபவர் சந்தியா (29). 2019-ல் டிஎஸ்பி பணியில் சேர்ந்தார். பயிற்சி முடித்து முதல்முறையாக கடந்த ஆண்டு செப்.8-ம் தேதி, பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்ட சட்டம் ஒழுங்குப் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இவர் தமிழக டிஜிபிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், "சட்டம் - ஒழுங்குப் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்கு உடல்நலப் பிரச்சினையும் உள்ளது. பணிச்சுமையால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனநிலை உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9kVOhlA
via IFTTT