புதுடெல்லி: கரோனா தொற்றால் உயிரிழப்புகள் மட்டுமின்றி பொருளாதார ரீதியதாகவும், மன ரீதியாகவும் பல பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த பாதிப்பு தற்போது சரியாகி வரும் நிலையில் உடல் ரீதியான பாதிப்புகளின் தாக்கம் தற்போது தான் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக கரோனா காலத்தில், இந்தியாவில் 85,000 பேர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கரோனா தொற்று முதல் அலையில் நாடு முழுவதும் கடுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளே முடங்கி கிடக்கும் நிலை உருவானது. இதன் காரணமாக அதிக அளவு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படலாம் என்று ஏற்கெனவே மருத்துவர்கள் எச்சரித்து இருந்தனர். இந்த பாதிப்புகளால் தொற்றா நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9bEU7L5
via IFTTT