புதுடெல்லி: தனது ஊழியர்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அலுவலகம், வீடு அல்லது நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் வேலை செய்வதற்கு அனுமதி வழங்கப் போவதாக ஏர்பிஎன்பி நிறுவனம் அறிவித்துள்ளது.
சான் ஃபிரான்சிஸ்கோவைத் தளமாக கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் ஊழியர்கள் தங்களின் பணிச்சூழலை சுதந்திரமாக தீர்மானிக்க முடியும் என்றும், ஊழியர்களின் முடிவு அவர்களுடைய சம்பளத்தை பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல் வெளிநாடுகளில் தங்கியிருந்து வேலை செய்ய ஊழியர்களுக்கு அனுமதியளிக்கப் போவதாகவும், ஒவ்வொரு இடத்திலும் வருடத்திற்கு 90 நாட்கள் தங்கி வேலை செய்யலாம் என்று அதன் சிஇஓ ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iDaCNSd
via IFTTT