89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 'ஓர் அசிங்கம்' - பாலியல் வழக்குகளில் இரு விரல் பரிசோதனை கூடவே கூடாது... ஏன்?

'ஓர் அசிங்கம்' - பாலியல் வழக்குகளில் இரு விரல் பரிசோதனை கூடவே கூடாது... ஏன்?

பாலியல் வழக்குகளில் இரு விரல் பரிசோதனைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,
இந்தப் பரிசோதனை முறையின் பிற்போக்குத்தனங்களையும், மோசமான விளைவுகளையும் பகிர்கிறார் வழக்கறிஞர் அஜிதா.

சமீபத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் பிறப்பித்த ஓர் உத்தரவில், "இரு விரல் பரிசோதனைக்கு முடிவு கட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. பாலியல் வழக்குகளில் குறிப்பாக இளம் வயதினர் சம்பந்தப்பட்ட பாலியல் வழக்குகளில் இரு விரல் பரிசோதனை அமலில் உள்ளது. இந்த சோதனை தனியுரிமை மீறல் என 2013-ல் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பல்வேறு உயர் நீதிமன்றங்களும் இந்த பரிசோதனையை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே, இரு விரல் பரிசோதனை தொடர்வதை அனுமதிக்க முடியாது. தமிழக அரசு உடனடியாக இரு விரல் பரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nzAFGhM
via IFTTT