89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 'குடிக்க தண்ணீர் கொடுங்களேன்...' - உணவு டெலிவரி சேவகர்களின் கோடை வாழ்க்கை

'குடிக்க தண்ணீர் கொடுங்களேன்...' - உணவு டெலிவரி சேவகர்களின் கோடை வாழ்க்கை

கோடைகாலம் ஆரம்பமானதில் இருந்து வெளியே போவதற்கே மக்கள் தயங்கி வருகின்றனர். அலுவலகம் செல்பவர்களும் இரு சக்கர வாகனங்களைத் தவிர்த்து பஸ், மெட்ரோ ரயில்களில் செல்கின்றனர். வெயிலில் போகாமல் இருப்பதற்கான மாற்று வழிகளை மக்கள் தேர்வு செய்து வருகின்றனர். ஆனால் இதே வெயிலில் காலில் சுடுதண்ணீரை ஊற்றியது போல் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் டெலிவரி சேவகர்கள்.
24 மணி நேரம் போதாது என்பது போல் விறுவிறுப்பாக ஓடும் இந்த வாழ்க்கை சூழலில் சமைப்பதற்கு நேரம் இல்லாவிட்டாலும் ஓட்டலில் போய் சாப்பிட வேண்டும் அல்லது ஓட்டலுக்கு சென்று சாப்பாடு வாங்கி வரவேண்டும் என்பதற்காகவே பெரிய அளவில் ஓட்டலை நாடாமல் இருந்த மக்கள்... உணவை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்கும் டெலிவரிக்கான ஒரு ஆப்ஷன் வந்த பிறகு வீட்டில் வேலையே இல்லையென்றாலும், கையில் ஃபோனும் உணவு அப்களும் இருந்தால் போதும் என ஆர்டர் போட்டு சாப்பிட்டு வருகிறார்கள்.

டெலிவரி செய்பவர் வீட்டிற்கு அருகில் வந்த பிறகு அவர் ஃபோன் செய்தாலும் உடனே எடுக்காமல் அவர்களை காக்க வைப்பது அல்லது எதாவது வேலையில் இருந்தால் அதனை முடித்து விட்டு பொறுமையாக டெலிவரி வந்திருக்கும் உணவை வாங்கப் போவது என்பதை பலர் வழக்கமாக வைத்திருப்பதே டெலிவரி செய்ய வருபவர்களின் மன வருத்தமாக உள்ளது.
ஆவடி பகுதியில் உணவு டெலிவரி செய்து வரும் ஜேகப் பேசுகையில், “ நான் டிப்ளமோ படிச்சிருக்கேன், கரோனா லாக்டவுன் நேரத்துல வேற வேலை கிடைக்கலை. அதான் அப்படியே இங்கே வேலைக்கு சேர்ந்துடேன். காலை 11 மணிக்கு அப்ல லாக் இன் பண்ணனும். ஆனா 12 மணிக்கு மேல தான் ஆர்டரே வரும். சரி ஆர்டர் வந்துருச்சுன்னு ஓட்டலுக்கு போய் சாப்பாட்டை வாங்கிக்கிட்டு டெலிவரி பண்ண போனால் கஸ்டமர் ஃபோனை எடுத்து ஒழுங்கா பதில் சொல்ல மாட்டாங்க. லொக்கேஷன் கரெக்டா இல்லைனாலும் எங்களிடம் தான் கஸ்டமர் கோவமா பேசுவாங்க. ஒரு சிலர் எல்லாம் லொக்கேஷனுக்கு போய் போன் பண்ணும் போது அரை மணி நேரம் எடுக்காம எல்லாம் இருந்திருக்கங்க. அதனால அடுத்த வர்ற ஆர்டருக்கும் போக முடியாது. எங்களை மனுஷனா மதிச்சாலே போதும். அவங்க ஆர்டர் போட்டா அதைக் கொண்டு வர்றது எங்க வேலை, எல்லாரும் இல்லை இன்னமும் ஒரு சில பேர் நாங்க ஏதோ செய்யக்கூடாத வேலையைச் செய்ற மாதிரி தான் பாக்குறாங்க. இது மாறினால் நல்லா இருக்கும்." என்றார்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EI0Ymb3
via IFTTT