சமுதாயத்துக்குத் தேவையான நாகரிகமான மனிதரை, புத்தகத்தால் மட்டுமே உருவாக்க முடியும்என்று எழுத்தாளர் பாஸ்கரன்கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
உலக புத்தக தின விழா ஆண்டுதோறும் ஏப்.23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, தமிழக பொதுநூலக இயக்ககம் சார்பாக அண்ணாநகர் (கிளை) முழு நேர கிளை நூலகத்தில் நேற்று உலக புத்தக தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற வருமானவரித் துறை அதிகாரியும் எழுத்தாளருமான பாஸ்கரன்கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருத்தினராகக் கலந்து கொண்டு ‘புத்தகவாசிப்பு மற்றும் வேலைவாய்ப்பு’என்ற தலைப்பில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் வாசகர்களிடம் கலந்துரையாடினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ICQLzqs
via IFTTT