ஊருக்கு வெளியே புதிய புதிய குடியிருப்புகள் உருவாகி நகரங்கள் விரைவடைந்து கொண்டு இருக்கின்றன. ஆனால், வீடுகள் பெருகி வருவதைப் போல மக்களுக்கிடையேயான உறவுகள் பெருக்கமடையவில்லை. காரணம், வீதிகளில் இருந்து வீடுகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. சமூக உறவுகளை வலுப்படுத்த அண்டைவீட்டாருடன் உறவாட நாம் திட்டமிட வேண்டும். அந்த இணைப்பை வீதிகளில் இருந்து தொடங்க வேண்டும் என்கிறார் எழுத்தாளரும் க்ரீன் இவாலுவேசன் அமைப்பின் நிறுவனருமான அனுபமா மோகன் ராம்.
இன்று சென்னையிலுள்ள குடியிருப்புகளை நான் கடந்து செல்லும்போதெல்லாம், இந்த வீடுகள் ஏன் தெருக்களில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டிருக்கின்றன என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு வீடும் நீண்ட சுற்றுச் சுவர்களால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, தெருவின் பார்வையிலிருந்து உள்ளொடுங்கி இருக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/M9gDUQd
via IFTTT