"நம் அன்றாட உணவுமுறையில் மிகவும் அவசியமான உணவாக பழைய சோறு இருக்க வேண்டும். எல்லா காலநிலைக்கும் பொருந்தும் உணவு இது. குறிப்பாக, வெயில் காலத்தில் தினமும் காலையில் பழைய சோறு சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. ஆனால், பழைய சோறு எப்படி செய்ய வேண்டும், அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என தெரிந்துகொண்டு சாப்பிட்டால்தான் அதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்” என்கிறார் உணவியல் நிபுணர் தாரிணி. அவர் மேலும் பகிர்ந்த பயனுள்ள தகவல்கள்:
பழைய சோறு எப்படி செய்ய வேண்டும்? - "பழைய சோறு செய்வது ன்பது என்ன கடினமா என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதில் சில நுணுக்கங்கள் உள்ளன. காலையில் செய்த சாப்படு அல்லது மாலை சமைத்த சாப்பாடு என எது வீட்டில் மீதமாகிறதோ, அதை ஓர் இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். நம்மில் பலர் செய்யும் தவறு என்னவென்றால், அடுத்த நாள் காலை தயாரான பழைய சோற்றில் உள்ள தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு பழைய சாதத்துடன் தண்ணீர் சேர்த்து சாப்பிடுவது. இப்படி சாப்பிடுவதால் எந்தப் பயனும் இல்லை. இரவு முழுவதும் ஊறிய தண்ணீரில்தான் சத்துக்குள் உள்ளன. எனவே, ஊற வைத்த அதே தண்ணீருடம் சாதத்தை சின்ன வெங்காயம் வைத்து சாப்பிட வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mfFOP7i
via IFTTT