கொலராடோ: மாரடைப்பு உட்பட இதய நோய் பாதிப்பு குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிந்து கொள்ள உதவும் புதுவகை ரத்த பரிசோதனை முறையை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.
இதய நோய் பாதிப்புகளால் ஒவ்வோர் ஆண்டும் 17.9 மில்லியன் மக்கள் உலக அளவில் தங்கள் இன்னுயிரை இழப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார மையத்தின் தரவுகள். இதில் ஐந்தில் ஒரு பங்கு உயிரிழப்பு இந்தியாவில் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய உடல் உழைப்பு இல்லாதது, புகையிலை பயன்பாடு மற்றும் குடிப்பழக்கம் மாதிரியானவை இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதய நோய் பாதிப்பு குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிந்து கொள்ள உதவும் புதிய வகை ரத்த பரிசோதனை முறையை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uLNOG6
via IFTTT