திருமலை: கரோனா தொற்று குறைந்துவிட்டதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சர்வ தரிசனம் சிறப்பு தரிசன முன்பதிவு டோக்கன் வழங்கப்படுகிறது. ஆனால் தர்ம தரிசன டோக்கன்கள் மட்டும் தினமும் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சர்வ தரிசன டோக்கன்களை பெற்று வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி, 12-ம் தேதிக்கான சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதனால், நேற்று திருப்பதி வந்த பக்தர்கள் 12-ம் தேதி வரை தங்குவதற்கு போதிய இடம் இல்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NaHgk27
via IFTTT