அந்தக் காலப் பள்ளி மதிய உணவில் ஒரு நாள் கஞ்சி, மறுநாள் கோதுமை உப்புமா, அடுத்த நாள் மீண்டும் கஞ்சி என்று ஒருநாள் விட்டு ஒருநாள் அரிசிக் கஞ்சியாகவே ஊற்றினார்கள். ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கத் தொடங்கியவர்கள் அந்தக் கஞ்சியைக் குடித்துத்தான் படித்து மேல்நிலைக்கு வந்தார்கள். இன்று கஞ்சி என்பது ஏழ்மைப்பட்டோர் உணவுப் பட்டியலிலும்கூட இடம்பெறுவது இல்லை என்பது துரதிருஷ்டம்.
செரிமானத் திறனை மீட்டெடுக்க - உடலின் செரிமானத் திறன் மந்தமாகிப் போன நிலையில் அரிசிக் கஞ்சியே மிகச் சிறந்த உணவு. எந்த நோயென்றாலும் நடுத்தர வயதினர் என்றால் தொடர்ந்து மூன்று நாளைக்குக் காலை, பிற்பகல் இரண்டு வேளையும் கஞ்சி மட்டுமே அருந்துவது உடல்நலனை மேம்படுத்தும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XKvl428
via IFTTT