தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் மறக்காமல் அம்பாளை தரிசனம் செய்யுங்கள். நம் அல்லல்களையெல்லாம் தீர்த்துவைப்பாள் அன்னை. துக்கத்தையெல்லாம் போக்கி அருளுவாள் தேவி.
பிரபஞ்சத்துக்கே சக்தியாக விளங்குபவள் பராசக்தி. பிரபஞ்ச சக்தியாக மட்டுமல்ல... உலகாளும் ஈசனுக்கே சக்தியைக் கொடுப்பவளாகத் திகழ்கிறாள் உமையவள். அதனால்தான் வழிபாடுகள் பல இருந்தாலும் வழிபாட்டு வகைகள் பல இருந்தாலும் சாக்த வழிபாட்டுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சக்தி வழிபாட்டை சாக்த வழிபாடு என்று போற்றுகிறது சாஸ்திரம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Oto5Cn
via IFTTT