89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருவோண அமாவாசையில் பெருமாள் தரிசனம்

திருவோண அமாவாசையில் பெருமாள் தரிசனம்

திருவோணமும் அமாவாசையும் இணைந்தநாளில், மகாவிஷ்ணுவை வழிபட்டால், மங்கல காரியங்கள் தடையின்றி நடந்தேறும் என்கின்றனர் ஆச்சார்யர்கள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். வீட்டில் பெருமாள் படத்துக்கு துளசி மாலை கொண்டு அலங்கரித்து, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, துளசி தீர்த்தம் பருகினால், தீராத நோயெல்லாம் தீர்த்தருளுவார் வேங்கடவன். தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். கல்யாணம் முதலான மங்கல காரியங்களுக்கு இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்!

அமாவாசை நாள் என்பதே வழிபாட்டுக்கு உரிய மிக முக்கியமான நாள். அமாவாசை தினத்தில், முதலில் நம் முன்னோர்களை வணங்கவேண்டும். அவர்களுக்கு தர்ப்பணம் முதலான கடமைகளைச் செய்யவேண்டும். எள்ளும் தண்ணீரும் விட்டு அவர்கள் பெயர் சொல்லி, கோத்திரம் சொல்லி பிரார்த்தனை செய்யவேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jFyKW2
via IFTTT