மாசி மாதம் மகத்தான மாதம். மாசி மாதத்தில் நம்முடைய வழிபாடுகளும் பூஜைகளும் மும்மடங்கு பலன்களைக் கொடுக்கும் என்பது ஐதீகம். மாசி மாதத்தின் செவ்வாய்க்கிழமை மிக விசேஷமான நாள்.
அதேபோல், மாசி மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில், சுமங்கலிகளை அழைத்து அவர்களுக்கு பாத பூஜை செய்து, அவர்களுக்கு முடிந்தால் மங்கலப் பொருட்களுடன் புடவை வைத்துக் கொடுக்கலாம். அல்லது மங்கலப் பொருட்களுடன் ஜாக்கெட் பிட் வைத்து தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் சரடு, குங்குமம், மஞ்சள் முதலானவற்றை வழங்கி நமஸ்கரிக்கலாம். சுமங்கலிகளை நமஸ்கரிப்பது விசேஷம். அதுவும் மாசி மாதத்தில் வேண்டிக்கொள்வது இன்னும் மகத்தான பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3utnRLN
via IFTTT