நெல்லுக்கு வேலியிட்ட சிவனாருக்கு நடைபெறும் சிறப்பு பூஜையிலும் வழிபாட்டிலும் கலந்துகொண்டு தரிசித்தால், இல்லத்தில் தனம் தானியம் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சோழ தேசத்துக் கோயில்கள் என்பது போல், பாண்டிய நாட்டு திருத்தலங்கள் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில் பாண்டிய தேசத்துக்குக் கோயில்களில் மிக முக்கியமான பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது நெல்லை நெல்லையப்பர் திருக்கோயில். தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் நெல்லையப்பர் கோயிலும் ஒன்று. ஞானசம்பந்தர் பதிகம் பாடிய திருத்தலம் இது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/398bRa2
via IFTTT