தை வெள்ளிக்கிழமையில் ராகுகாலத்தில் வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றுங்கள். அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று துர்கைக்கு நெய்தீபம் ஏற்றுவோம். எலுமிச்சை தீபமேற்றுவோம். கவலைகளும் கஷ்டங்களும் பனி போல் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். செவ்வாய்க்கிழமை மாலை 3 முதல் 4.30 மணி வரை ராகுகாலம். வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். நாளைய தினம் 22ம் தேதி வெள்ளிக்கிழமை, தை மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமை. இந்தநாளில், துர்கைக்கு ராகுகால வேளையில் விளக்கேற்றி வழிபடுங்கள். துக்கம் போக்கி, இருளை விலக்கி ஒளிமயமான வாழ்வை வரமெனத் தந்திடுவாள் துர்காதேவி.
சக்தி என்று அம்பாளைச் சொல்லுவோம். சக்தி இல்லையேல் சிவமில்லை என்கிறது புராணம். உலகின் அத்தனை உயிர்களின் இயக்கங்களுக்கும் மூலாதாரமே சக்தி என்கிற பராசக்திதான். உலகுக்கே அம்மையாகத் திகழும் சக்திதேவியை வணங்கி வந்தால், நம் சங்கடங்கள் யாவும் தீரும். துக்கங்கள் அனைத்தும் விலகும். தோல்விகள் அனைத்தும் வெற்றியாகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p9PCpG
via IFTTT