வாஸ்து புருஷனை இல்லத்தில் வணங்கி வந்தால், வீட்டில் உள்ள திருஷ்டியைப் போக்குவார். மனையில் உள்ள துர்தேவதைகளைத் துரத்தி அருளுவார். தெரிந்தோ தெரியாமலோ, உரிய நியமங்கள் ஏதுமின்றி வீடு கட்டியிருந்தாலும் வாஸ்து புருஷனை தொடர்ந்து வழிபட்டு வந்தால், நம் இல்லத்தில் சகல செளபாக்கியங்களும் தந்து அருளுவார். சகல ஐஸ்வரியங்களையும் கொடுத்து அருளுவார் வாஸ்து புருஷன்!
வாஸ்து புருஷன் தூங்கும் நேரம், விழிக்கும் நேரம் என்று இருப்பதாக சாஸ்திரங்களும் புராணங்களும் விவரிக்கின்றன. பஞ்சாங்கத்தில், வாஸ்து புருஷனின் தூங்கும் நேரம் குறித்தும் விழிக்கும் நேரம் குறித்தும் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sTMTTR
via IFTTT