89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தீராத நோயையும் தீர்த்து வைக்கும் திருமால் மந்திரங்கள்! 

தீராத நோயையும் தீர்த்து வைக்கும் திருமால் மந்திரங்கள்! 

மகாவிஷ்ணு காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், பிரார்த்தித்து வந்தால், விரைவில் குணமாவார்கள். கணவன்மார்களின் ஆயுள் கூடும். தாலி பாக்கியம் நிலைக்கும் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள். குடும்பத்தில் தம்பதி ஒற்றுமையை மேம்படுத்தும். இல்லத்தில் அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ளும் என்பது உறுதி.

வழிபாடுகள் மகத்தான பலன்களைக் கொடுப்பவை. மனமொருமித்து நாம் செய்கிற பூஜைக்கும் வலிமை உண்டு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஐந்தெழுத்து மந்திரமோ எட்டெழுத்து மந்திரமோ... நாம் அவற்றைச் சொல்லச் சொல்ல, அந்த மந்திரச் சொல்லுக்குள் இருக்கிற அதிர்வலைகள், நமக்குள்ளேயும் நமக்கு வெளியேயும் நம்மைச் சுற்றியும் வியாபித்து நமக்கு அரண் போல் இருந்து காத்தருளும் என்கிறது சாஸ்திரம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/369VvMb
via IFTTT