சபரிமலை... ஐயப்ப சுவாமி என்றதும் நம் நினைவுக்கு வரும் விஷயங்களில் முக்கியமானது... ஹரிவராசனம்.
சபரிமலையில் ஐயப்ப ஸ்வாமியை உறங்க வைக்கும் ’ஹரிவராசனம் விஸ்வமோஹனம்’ எனும் உறக்கப்பாட்டு. இது, அத்தாழபூஜை எனும் அர்த்தசாம பூஜை முடிந்த பின் சபரிமலை திருத்தலத்தின் நடை சார்த்தும் பாடலாக ஒலிக்கும். இந்தப் பாடலை இயற்றியவர் கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர். திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி எனும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர், 1920-ம் வருடம் இந்தப்பாடலை இயற்றினார் என்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள்.
முன்னொரு காலத்தில், வசதிவாய்ப்புகளெல்லாம் இல்லாத குடும்பம்தான். ஆனாலும் தன் வீட்டுப் பக்கம் எவர் வந்தாலும் அவர்களைப் பசியாற வைத்த குடும்பம் அது. அப்படியொரு வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் அந்தப் பரம்பரையினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qQtkuk
via IFTTT