தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா நாளை (அக்.3)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 12-ம் தேதி நள்ளிரவு முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
இந்தியாவிலேயே கர்நாடகாமாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டுக்கான தசரா திருவிழா நாளை (அக்.3)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு இன்று(அக். 2) முற்பகல் 11 மணிக்கு காளி பூஜையும், இரவு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iJY40GZ
via IFTTT