இல்ல நிகழ்ச்சிகள் என்றாலும் சரி, பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வது என்றாலும் சரி, பெண்கள் முதலில் தேடுவது அழகு நிலையங்களைத்தான். அழகை மேம்படுத்திக் கொள்வதில் பெண்களுக்கு எப்போதுமே அலாதி பிரியம்தான். அந்த வகையில், முகம், தலைமுடி ஆகியவற்றை அழகுபடுத்தி வந்த பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது, நக ஓவியம்.
தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நக ஓவிய பார்லர்கள் அதிகரித்து வருகின்றன. இளம்பெண்கள் மட்டுமின்றி, இல்லத்தரசிகள், வயது மூத்த பெண்கள் என அனைவரிடமும் நக ஓவியம் பிரபலமடைந்து வருகிறது. முன்பெல்லாம் மருதாணி இட்டு நகங்களை சிவப்பு நிறமாக்கி மட்டும் அழகு பார்த்தனர். தற்போது நகங்களை வைத்து கலைக்கூடமே நடத்தி வருகின்றனர் என்றால் அது மிகையல்ல.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QOXJTSI
via IFTTT