ஜோத்பூர்: இந்திய விமானப்படை பாலின சமத்துவத்தை உறுதி செய்யவும் பெண்களுக்கு அதிகாரம் வழங்கவும் உறுதி பூண்டுள்ளது. இதன் அடிப்படையில், போர் விமான படைப் பிரிவில் கடந்த 2016-ம்ஆண்டு முதல் முறையாக மோகனாசிங் ஜிதர்வால் (32), பாவனா காந்த் மற்றும் அவனி சதுர்வேதி ஆகிய 3 பெண் பைலட்கள் சேர்க்கப்பட்டனர். இப்போது போர் விமான பைலட்களாக 20 பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், படைப்பிரிவு தலைவரான மோகனா சிங், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக தேஜஸ் போர் விமானத்தின் முதல் பெண் பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், தேஜஸ் போர் விமானங்களை இயக்கும் எலைட் 18 ‘பிளையிங் புல்லட்’ படைப்பிரிவில் இவர் இணைய உள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், இந்திய விமானப்படை சார்பில் தாரங் சக்தி என்ற பெயரில் இரண்டாம் கட்ட பன்னாட்டு விமானப்படை போர் பயிற்சி கடந்த ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெற்றது. இதில் மோகனா சிங்கும் பங்கேற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FzDNH7u
via IFTTT