சென்னை: சென்னையில் விநாயகர் சதுர்த்திவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீதிகளில் விதவிதமாக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம்கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முந்தைய நாளிலேயே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான இடங்களில் களிமண் விநாயகர் சிலை கடைகள் திறக்கப்பட்டு, விறுவிறுப்பாக விற்பனை நடந்தது. குறைந்தபட்சம் ரூ.50 முதல் ரூ.2,000 வரை சிலைகள் விற்பனையாகின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xU6Hf4p
via IFTTT