89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தேனி | ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வராக நதியில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

தேனி | ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வராக நதியில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

தேனி: தேனி மாவட்டத்தில் 863 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. பெரியகுளத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் வராக நதியில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்றது. தேனியில் இந்து முன்னணி சார்பில் பெத்தாட்சி விநாயகர் கோயில் எதிரே தலைமை விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மாவட்டத் தலைவர் முருகன், மாவட்டச் செயலாளர் உமையராஜன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QFOeWBq
via IFTTT