மாசி மாதத்தின் பிரதோஷமும் மகா சிவராத்திரியும் அடுத்தடுத்த நாள் வருகிறது. 10ம் தேதி பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்வோம். மறுநாள் 11ம் தேதி வியாழக்கிழமை மகா சிவராத்திரி. இந்த இரண்டு நாட்களும் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவபூஜையில் கலந்துகொள்வோம். சிவபெருமானுக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை கண்ணாரத் தரிசித்து மனதார பிரார்த்தனை மேற்கொள்வோம்.
மாதந்தோறும் அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளும் பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாவது நாளும் திரயோதசி திதியானது வரும். திரயோதசி என்பதே பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30qySjl
via IFTTT