மகா சிவராத்திரி நாளில், இரவில் கண்விழித்து, 1008 முறை நமசிவாயம் சொல்லி சிவபெருமானை தரிசித்து வணங்கினால், பிறவிப் பெருங்கடலைக் கடக்கலாம். பாவங்கள் அனைத்தும் விலகும், புண்ணியங்கள் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். 11ம் தேதி வியாழக்கிழமை, மகா சிவராத்திரி. குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையில், மகா சிவராத்திரி நன்னாளில், நமசிவாயம் சொல்லி தென்னாடுடைய சிவனாரைத் தரிசிப்போம்.
சிவனாருக்கு உகந்த ராத்திரி சிவராத்திரி என்பார்கள். மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வருவதை மகா சிவராத்திரி என்பார்கள். எல்லா நாளும் வில்வம் வழங்கி சிவனாரை தரிசித்தாலும் மகா சிவராத்திரி திருநாளில், சிவபெருமானுக்கு ஒரேயொரு வில்வம் சார்த்தினாலே மகா புண்ணியம் என்கிறது சிவபுராணம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3er4RYT
via IFTTT