89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இரு நாடுகளிடையே போர் நிறுத்தம், அமைதி வேண்டி ரஷ்யா - உக்ரைன் தோழிகள் தமிழக கோயில்களில் வழிபாடு

இரு நாடுகளிடையே போர் நிறுத்தம், அமைதி வேண்டி ரஷ்யா - உக்ரைன் தோழிகள் தமிழக கோயில்களில் வழிபாடு

கும்பகோணம்: ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டி, அந்த நாடுகளைச் சேர்ந்த தோழிகள் 2 பேர், தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஷெனியா(27), உக்ரைனைச் சேர்ந்தவர் இலியானா(29). இவர்கள் இருவரும், இரு நாடுகளிடையே போர் தொடங்குவதற்கு முன்பிருந்தே தோழிகளாக உள்ளனர். அண்மையில் இந்தியா வந்த இருவரும், இரு நாடுகளிடையே போர் நிறுத்தம், அமைதி வேண்டி தமிழக கோயில்களில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G5gAtvU
via IFTTT