89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மரபுவழி நோயால் பாதிக்கப்படும் ஆண் குழந்தைகள்: அடுத்த தலைமுறைக்கு வராமல் தடுக்கும் எம்டிசிஆர்சி நிறுவனம்

மரபுவழி நோயால் பாதிக்கப்படும் ஆண் குழந்தைகள்: அடுத்த தலைமுறைக்கு வராமல் தடுக்கும் எம்டிசிஆர்சி நிறுவனம்

கோவை: ஆண் குழந்தைகளை மட்டும் பாதிக்கும் மரபுவழி நோயான தசை சிதைவு நோயை அடுத்த தலைமுறைக்கு வராமல் தடுக்கும் பணியில் கோவையைச் சேர்ந்த மரபணு பரிசோதனை, கலந்தாய்வு, பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (எம்டிசிஆர்சி) ஈடுபட்டு வருகிறது. கோவை ராயல் கேர் மருத் துவமனை வளாகத்தில், ஆலோச னைகளை வழங்கி வரும் எம்டிசிஆர்சி தொண்டு நிறுவனத் தின் நிறுவனர் பி.ஆர்.லஷ்மி கூறியதாவது: மரபியல் ரீதியான காரணங்கள் தசை சிதைவு நோய்க்கு அடிப் படையாகும். டிஸ்ட்ரோபின் எனப் படும் மரபணு புரதக் குறைபாடு காரணமாக ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கும் மரபு வழி நோய் இது. இதற்கு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை.

எனினும், நோயின் பாதிப்பு தீவிரமடையாமல் பார்த்துக் கொள் வதுடன், அந்தக் குடும்பத்தில் மீண்டும் இந்நோயுடன் குழந்தை கள் பிறப்பதைத் தடுக்க முடியும். இதை கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எம்டிசிஆர்சி சாத்தியப்படுத்தி வருகிறது. தசை சிதைவு நோய்க்கான பரிசோத னைகளை மேற்கொள்வதுடன், பராமரிப்பு மற்றும் தடுப்பு வழி முறைகளை இலவசமாக வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் 3,500 குழந் தைகளில் ஒரு ஆண் குழந்தைக்கு தசை சிதைவு நோய் ஏற்படுகிறது. உலக அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் இந்நோய் பாதிப்பு அதிமாக உள்ளது. எம்டிசிஆர்சி சார்பில் கிராமங் கள், நகரங்களைச் சேர்ந்த 7,000 சிறுவர்களிடம் மரபணு பரி சோதனை நடத்தப்பட்டது. இதில் 4,000 பேரின் மரபணு பரிசோதனை யில் டுஷின் தசை சிதைவு நோய் பாதிப்பு அறிகுறி கண்டறியப் பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3a24oBs
via IFTTT