கடலூர்: கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,423 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிலைகளுக்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.கடலூர் இனிப்புக் கடை ஒன்றில் 72 கிலோ லட்டு விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் இதனை வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, வடலூர், வேப்பூர், நெய்வேலி ,ஸ்ரீமுஷ்ணம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று(செப்.7) காலை 1,423 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள், பக்தர்கள் தேங்காய் உடைத்து படையலிட்டு வழிபட்டனர். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8XTcmw4
via IFTTT