ராமநாதபுரம்: மாநில அளவில் கைத்தறி கைவண்ணத்தில் முதல் மற்றும் இரண்டாம் பரிசைப் பெற்ற பரமக்குடி நெசவாளர்களுக்கு கைத்தறித்துறை அலுவலர்கள், நெசவாளர் சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 85 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 11,257 கைத்தறி நெசவாளர்கள் இயங்கி வருகின்றனர். இப்பகுதியில் கைத்தறி பருத்தி சேலைகள், செயற்கைப்பட்டு, காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு, கோ-ஆப்டெக்ஸ் மற்றும் பிற விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HMZh1Ia
via IFTTT