புதுடெல்லி: இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் முத்தமிழ் விழா நடைபெற்றுள்ளது. ஒருநாள் முழுவதிலுமான இவ்விழாவை ஆறாம் ஆண்டாக, அந்நகரில் வாழும் தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டிலும் திரளான எண்ணிக்கையில் தமிழர்களின் குடும்பங்கள் வசிக்கின்றன. தங்கள் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வளர்க்கும் வகையில் இவர்கள் தமிழ் ஆர்வலர் குழு ஐக்கிய இராச்சியம் எனும் பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வருகின்றனர். இதன் ஆறாம் ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை பர்மிங்காமின் ஷெர்லி மெத்தெடிஸ்ட் தேவாலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பர்மிங்காமின் இந்திய தூதரகத்தின் தலைவரான முனைவர் மு.வெங்கடாசலம் லண்டனின் துணை மேயரான அப்பு சீனிவாசன் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TPdWGyq
via IFTTT