மதுரை: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மதுரையைச் சேர்ந்த மூலிகை தோட்ட தமிழாசிரியை பாராட்டினார். இதைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
மதுரை மாவட்டம், பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழாசிரியை சுபஸ்ரீ. இவர் வரிச்சூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியையாக பணி புரிகிறார். மூலிகைகள் மீது ஆர்வம் கொண்ட இவர், தனியாக மூலிகை தோட்டம் ஒன்றை உருவாக்கி பராமரிக்கிறது.சுமார் 40 சென்ட் இடம் கொண்ட இந்த மூலிகை தோட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைகளை வளர்க்கிறார். இங்குள்ள ஒவ்வொரு மூலிகை செடியையும் துல்லியமாக தெரிந்து கொள்வதற்காக அவற்றின் பெயர்களையும் ஆவணப் படுத்தியுள்ளார். கரோனா காலத்தில் தொற்று பாதித்தவர்களுக்கு மூலிகை மருந்து கொடுத்து குணப்படுத்தியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iJG45Ku
via IFTTT