89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருப்பதி கருட சேவையின்போது பைக்குகளுக்கு அனுமதி ரத்து

திருப்பதி கருட சேவையின்போது பைக்குகளுக்கு அனுமதி ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா, வரும் அக்டோபர் 4-ம் தேதி முதல் 12-ம்தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான அக்டோபர் 4-ம் தேதி மாலை, ஆந்திர மாநில அரசின் சார்பில் முதல்வர் சந்திரபாபுநாயுடு தனது மனைவியுடன் தம்பதி சமேதராக பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்க உள்ளார். இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான 8-ம் தேதி மாலை 7 மணிக்கு கருட சேவை நடைபெற உள்ளது.

இதில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கருட சேவையின்போது பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், திருமலைக்கு பைக்குகள் செல்ல தடை விதிக்கப்பட்டுஉள்ளது. அதாவது அக்டோபர் 7-ம் தேதி இரவு 9 மணி முதல் 9-ம் தேதி காலை 6 மணி வரைபைக்குகள் திருமலை செல்ல அனுமதி இல்லை என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1RXMHqy
via IFTTT