காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள தங்க முலாம் பூசப்பட்ட 4 டன் எடை கொண்ட தேர் நேற்று அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் மாகாணம் சியாடில் நகரில் வேதா என்ற கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலுக்கு புகழ் பெற்ற ஆன்மிக நகரமான காஞ்சிபுரத்தில் தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட தேரை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி காஞ்சிபுரத்தில் ஆன்மிக பொருட்களை தயார் செய்யும் நிறுவனத்துக்கு இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 23 அடி உயரத்தில் 4 டன் எடையில் இரும்பு மற்றும் தாமிர உலோகங்களை பயன்படுத்தி தங்க முலாம் பூசப்பட்ட தேரை அந்நிறுவனம் தயாரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/13yVD2E
via IFTTT