89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சமோசா விற்றுக்கொண்டே நீட் தேர்வில் சாதனை - உ.பி. மாணவர் தினமும் 5 மணி நேரம் வேலை

சமோசா விற்றுக்கொண்டே நீட் தேர்வில் சாதனை - உ.பி. மாணவர் தினமும் 5 மணி நேரம் வேலை

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர்சன்னிகுமார்(18). 12-ம் வகுப்பு படித்து வந்த இவர் பள்ளி நேரம் முடிந்ததும் சமோசா கடைநடத்தி விற்பனை செய்து வந்தார். அதே நேரத்தில்எம்பிபிஎஸ் படிப்பில் சேர ஆசைப்பட்ட சன்னிகுமார், சமோசா விற்றுக்கொண்டு நீட் தேர்வுக்கும் தயாராகி வந்தார். கடந்த மே மாதம்சன்னிகுமார் நீட் தேர்வு எழுதினார்.

அதன் முடிவுகள் வெளியான நிலையில்அவர் 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். சமோசா கடையில் தினமும் 5 மணி நேரம் வேலை செய்து கொண்டே அவர்இந்த மதிப்பெண் எடுத்து மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார். நீட் மருத்துவத் தேர்வுக்காக குறிப்புகளை காகிதங்கள் எழுதி வைத்து அதனை சுவரில் ஓட்டிவைத்து படித்து வந்தார் சன்னி குமார். இரவு முழுவதும் படிப்பு, காலையில் சமோசா கடையில் வேலை என்பதால் அவருக்குத் தூக்கமில்லாமல் கண்களில் வலிஏற்பட்டுள்ளது. அதனையும் பொருட்படுத்தாமல் சன்னிகுமார் திறம்பட படித்து 664 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/d6syqfJ
via IFTTT