ஒரு மாதமாக சச்சு செய்த பிராஜெக்ட்டை , அமெரிக்காவில் இருக்கும் வாடிக்கையாளர் திருப்பி அனுப்பிவிட்டார் என்று சோர்வாக இருந்தார். அவரே சரியாகிவிடுவார் என்று நானும் தொந்தரவு செய்யாமல் இருந்தேன்.
அலுவலகத்திலிருந்து விடுதி அறைக்கு வந்ததும் ரீல்ஸ் பார்த்துக் கொண்டு பொழுது போக்கிக் கொண்டிருந்தார். எதிலும் அவருக்கு ஆர்வமோ உற்சாகமோ இல்லாமல் இருந்தார்.
“சச்சு, ஏன் சாப்பிட வரல?”
“எனக்குப் பசிக்கல நஸீ, நீ போய்ச் சாப்பிடு” என்று சொல்லிவிட்டு ரீல்ஸ் பார்க்க ஆரம்பித்தார்.
பத்து மணிக்கு ஸ்விகியில் ஆர்டர் போட்டுச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டார்.
மறுநாள் அவரை விடுமுறை எடுக்கச் சொன்னேன். அவருக்கு பிடித்த மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்றேன். பலூன் சுடும் விளையாட்டு என்றால் ஒரு குழந்தையாக மாறிவிடுவார். விளையாடினார். கடல் அலையில் காலை நனைத்து, சுண்டல் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினோம்.
“தேங்க் யூ நஸீ, மனசு லேசா இருக்கு”.
“டோபமைனுக்கு நன்றி சொல் சச்சு”என்று ஆரம்பித்தேன்.
வெற்றி, நிம்மதி, மகிழ்ச்சி எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால் டோபமைனைச் சரியாக வைத்திருக்க வேண்டும். அதை வெளியே எங்கும் தேட வேண்டாம். நமது மூளைக்குள் சுரக்கும் ஒருவிதமான ஹார்மோன்தான் அது. டோபமைன் குறைந்தால் கார்டிஸால் அதிகரிக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும். கார்டிஸாலைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றால் டோபமைன் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
டோபமைன் வெறும் ஹேப்பி ஹார்மோன் மட்டுமல்ல. இது நம் ஊக்கம், கற்றல், இலக்கு நோக்கிய நடத்தையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. டோபமைன் சரியான அளவில் சுரக்கும்போது, நாம் ஆற்றல் நிரம்பியவர்களாகவும் கவனமாகவும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராகவும் இருப்போம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1QOf3Va
via IFTTT