பழநி: பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைய உள்ள நிலையில் கண்காட்சியை காண கூட்டம் கூட்டமாக மாணவர்கள், பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் ஆக.24, 25-ம் தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகள் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, மலை வடிவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு, அதனுள் அறுபடை வீடு கோயில்களில் மூலவர், முருகனின் பெருமைகளை கூறும் புகைப்பட கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, 200 பேர் அமர்ந்து பார்க்கும் 3-டி திரையரங்கம் மற்றும் 100 பேர் அமர்ந்து பார்க்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) அரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jmVwAEc
via IFTTT