மயிலாடுதுறை: தமிழக அரசு பொறுப்பேற்ற பின்னர் 2,000-வதாக நேற்று நடைபெற்ற, பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் ஆதீனகர்த்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள பரசலூரில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இளம் கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர் கோயில்உள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கும்பாபிஷேகத்துக்கான முதல்கால யாகசாலை பூஜை கடந்த 27-ம் தேதி தொடங்கியது. நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, மங்கல வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க கடங்கள்புறப்பாடு நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/utphAD1
via IFTTT