சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை ஒட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று (ஆக.15) சென்னையில் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து நடைபெற உள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில்,மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், வடபழனி முருகன் கோயில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில், தம்புசெட்டி தெரு காளிகாம்பாள் கோயில், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சென்னையில் உள்ள 31 கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/C3G1kSl
via IFTTT