89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பக்தர்கள் வசதிக்காக பழநியில் கூடுதலாக முடி காணிக்கை மண்டபம் திறப்பு

பக்தர்கள் வசதிக்காக பழநியில் கூடுதலாக முடி காணிக்கை மண்டபம் திறப்பு

பழநி: பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக சுற்றுலா பேருந்து நிலையத்தில் கூடுதலாக முடி காணிக்கை மண்டபம் இன்று (ஆக.14) காலை திறக்கப்பட்டது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்களின் தலை முடியை காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருவிழா காலங்களில் தினமும் சராசரியாக 20 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர். இதற்காக, பழநி தேவஸ்தானம் சார்பில் திருஆவினன்குடி கோயில் அருகில், சண்முக நதி, வின்ச் நிலையம் அருகில், தண்டபாணி நிலைய வளாகம் உட்பட 7 இடங்களில் முடி காணிக்கை செலுத்தும் இடங்கள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rsOCGat
via IFTTT