89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 7 மாவட்டங்களில் 211 ஏரி, குளங்களை தூர்வாரிய பேராவூரணி விவசாயிகள் குழு கவுரவிப்பு!

7 மாவட்டங்களில் 211 ஏரி, குளங்களை தூர்வாரிய பேராவூரணி விவசாயிகள் குழு கவுரவிப்பு!

தஞ்சாவூர்: 7 மாவட்டங்களில் 211 ஏரி, குளங்களை தூர்வாரிய விவசாயிகள் குழுவுக்கு சுதந்திர தின விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்து, ரூ.1 லட்சத்துக்கான நிதி உதவியும் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி பகுதியில், கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலின் போது, மின் கம்பங்கள் சாய்ந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன் ஏரி,குளங்கள் முறையாக தூர்வாரததால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பை சந்தித்து. அப்போது, நீரின் தேவையை உணர்ந்த பேராவூரணி பகுதியை சேர்ந்த இளைஞர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து, கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைஃபா) அமைப்பை, கடந்த 2019-ம் ஆண்டு துவங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tOI7Grk
via IFTTT