சாத்தூர்: சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி பெரும் திருவிழா இன்று (ஆக.16) விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Dw4yL5C
via IFTTT