கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலயத்தின் விண்ணேற்புப் பெருவிழா இன்று (ஆக.7) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வீரமாமுனிவர் பங்கு குருவாகப் பணியாற்றிய காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலய விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றத்தையொட்டி இன்று மாலை 6 மணிக்கு மிக்கேல் அதிதூதரின் திருவுருவப் பவனி நடந்தது. தொடர்ந்து, 6.30 மணிக்கு கொடிமரம் நடப்பட்டது. பின்னர், கொடிமரத்தில் முதலாவதாக திருத்தலக் கொடியும், அதைத் தொடர்ந்து கிறித்துவ மக்கள் கொண்டு வந்திருந்த வண்ணக்கொடிகளும் அணிவகுத்துக் கட்டப்பட்டன. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அர்ஜித், பெருவிழா கொடியை ஏற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rEaIMTt
via IFTTT