செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலின் கிரிவலப் பாதையில், மலையையொட்டி சொக்கம்மன் கோயில் அமைந்துள்ளது. சதுரங்கப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த தம்பதியர், வேதகிரீஸ்வரரிடம் வேண்டியதின் பேரில், பெண் குழந்தை ஒன்று பிறக்க, குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஆலோசித்தபோது ‘சொக்கம்மாள்’ என பெயர் சூட்டுமாறு அசரீரி ஒலித்ததது.
இதன்பேரில், ‘சொக்கம்மாள்’ என பெயரிட்டு வளர்த்தனர். சொக்கமாளுக்கு திருமண வயதான போது, அதுபற்றி முடிவெடுக்க, வேதகிரீஸ்வரர் மலையை வலம் வந்து ஆலோசிக்கலாம் என உறவினர்கள் கூற, மலையை வலம் வந்த சொக்கம்மாளுக்கு வேதகிரீஸ்வரர் காட்சி யளித்து மலையின் மீது அழைத்து சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DmWKZkw
via IFTTT