89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தஞ்சை, திருவையாறில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகம்: நீர்நிலைகளில் ஏராளமான பெண்கள் வழிபாடு

தஞ்சை, திருவையாறில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகம்: நீர்நிலைகளில் ஏராளமான பெண்கள் வழிபாடு

தஞ்சாவூர்: தஞ்சாவூர், திருவையாறு பகுதிகளில் பொதுமக்கள் நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழாவை இன்று (ஆக.3) உற்சாகத்தோடு கொண்டாடினர்.

ஆடி மாதத்தில் 18-வது நாளில் வரும் ஆடிப்பெருக்கு விழாவை காவிரி கரையோரத்தில் உள்ள மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் காவிரி ஆற்றுக்கு வந்து அரிசி, பழங்கள், அவல், காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து படையலிடுவது வழக்கம். அதேபோல் சுமங்கலிப் பெண்கள் நீர்நிலைகளுக்குச் சென்று எப்போதும் தங்களுடைய வாழ்வும், வளமும் குன்றாமல் இருக்க வேண்டும் என காவிரி நதியிடம் வேண்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் புதிய மஞ்சள் கயிறை கழுத்தில் அணிந்து கொள்வர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CrkM7Eb
via IFTTT