சென்னை: சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித் தேர் செய்வதற்காக உருவாக்கப்பட்ட மரத்தேருக்கு வெள்ளித் தகடு வேயும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்து, 277 கிலோ வெள்ளி கட்டிகளை வழங்கினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறைசார்பில் கோயில்களுக்கு ரூ.58.28 கோடி மதிப்பீட்டில் 97 புதிய மரத்தேர்கள் செய்யப்பட்டு வருவதோடு,ரூ.11.38 கோடி மதிப்பீட்டில் 50 தேர்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vdpM81y
via IFTTT