வயநாடு: வயநாட்டின் சூரல்மலை பகுதியில் உள்ள வெலர்மலா என்ற இடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி லயா என்பவர் கடந்தாண்டு பள்ளியின் இதழுக்காக சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார். அதில் நீர்வீழ்ச்சி ஒன்றில் மூழ்கிய சிறுமி பறவையாக திரும்பி வந்து, நீர் நிலைகளுக்கு அருகில் சென்றால் ஏற்படும் ஆபத்து குறித்து கிராமத்தினருக்கு எச்சரிக்கை விடுத்ததாக கதை எழுதியிருந்தார்.
அதில் அந்தப் பறவை கூறுகையில், ‘‘குழந்தைகளே இங்கிருந்து தப்பிச் செல்லுங்கள். இங்கு ஆபத்து நேரிடவுள்ளது’’ என கூறியது. உடனே குழந்தைகள் ஓடிச் சென்று மலையை திரும்பி பார்த்தபோது, அங்கு திடீரெனவெள்ளம் வருவதை பார்த்தனர். அதன்பின் அந்தப் பறவை ஒரு அழகிய பெண்ணாக மாறுவதை அவர்கள் பார்த்தனர். தான் சந்தித்த நிலைமையை அவர்கள் சந்திக்க வேண்டாம் என எச்சரிப்பதற்காக அந்தப் பெண் திரும்பி வந்தார் என கதையில் கூறப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QJpkxoq
via IFTTT