கோவை: இயந்திரமயமான வாழ்க்கை முறையில் மாறிவிட்ட உணவுப் பழக்க முறையால் பலவித வாழ்வியல் நோய்கள் வந்துவிட்டன. குறிப்பாக ஷவர்மா, தந்தூரி சிக்கன் சாப்பிட்ட சிறுவர்கள் உயிரிழப்பு என்ற செய்திகள் சமீபத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இது அடங்குவதற்குள் நிறமூட்டப்பட்ட பஞ்சு மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட ‘ரோடமைன்-பி’ என்ற செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதை உட்கொள்ளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தமிழகத்தில் நிறமிகள் கலந்த பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்போது அடுத்த பேரிடியாக சாலையோர கடைகளில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பானிபூரி நீரில் நிறமி சேர்ப்பதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது. அண்மையில் கர்நாடகாவில் பானிபூரி நீரில் புற்று நோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டதால், தமிழகம் முழுவதும் பானிபூரி கடைகளில் தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CanNKIv
via IFTTT